சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி திருவாரூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப். 14: நீதிமன்ற உத்தரவுபடி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி திருவாரூரில் நேற்று செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், பணியில் சேர்ந்த நாள் முதல் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், இடம் மாறுதல் ஆணையினை உடனடியாக அமுல்படுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் சிவபிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் மைக்கல்மரியா, மாவட்ட செயலாளர் ராமதாசன் மற்றும் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: