மனைவி கோபித்து சென்றதால் விரக்தி கணவர் தூக்கிட்டு தற்கொலை

மன்னார்குடி, பிப். 14; திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த திருமக்கோட்டை காவல் சரகத் திற்குட்பட்ட பாளையக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ர மணியன் (57). இவர் தனது வீட்டில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரின் மனைவி அஞ்சம்பாள் (45). இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் 1 மகளுக்கு திருமணமாகி தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் வசித்து வருகிறார். மது குடிக்கும் பழக்கம் உள்ள பாலசுப்ரமணியன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. மேலும் டீக்கடையையும் சரிவர நடத்தாமல் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அஞ்சம்பாள் தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதுக்கூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மற்றொரு மகளை யும் மகனையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இருந்த பாலசுப்ரமணியன் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் மது குடித்து விட்டு வந்த பாலசுப்ரமணியன் வாழ்வில் விரக்தியடைந்து தனது வீட்டின் உத்திரத்தில் தூக்கு போட்டு தற் கொலை செய்து கொண்டார். இது குறித்து  அஞ்சாம்பாளுக்கு தகவல்  அளிக்கப்பட்டது. பின்னர் அஞ்சம்மாள் திருமக் கோட்டை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற எஸ் எஸ் ஐ பிரேம் ஆனந்து மற்றும் போலீசார் பாலசுப்பிர மணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அஞ்சம்பாள் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் உஷா நந்தினி வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

Related Stories: