திருவாரூர், பிப். 14: திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திருக்காரவாசலில் கடந்த மாதம் 27ம்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்றும் 18வது நாளாக இந்த போராட்டமானது போராட்ட குழு பொறுப்பாளர்கள் தியாகராஜன், சுப்பையன், சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.