தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த கோரிக்கை

சங்கராபுரம், பிப். 14: சங்கராபுரத்தை சுற்றி சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள ஏராளமானோர் சிகிச்சைக்காக தினமும் சங்கராபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.மேலும் அதிக கிராமங்கள் இந்தபகுதியில் உள்ளதாலும், மலைக்கிராமங்கள் அதிக அளவில் உள்ளதாலும் சங்கராபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும் அங்கு தீவிர சிகிச்சை பிரிவு கிடையாது. இதனால் விபத்தில் சிக்கும் பொது மக்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்படுகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுத்து சங்கராபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என சங்கராபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: