தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

குளத்தூர், பிப். 14: குளத்தூர் அருகே உள்ள பல்லாகுளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆதிராம்(31). இவரது மனைவி சின்னமுனியம்மாள் (25). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஆதிராமுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் குடிபோதையில் வந்த ஆதிராம், சின்னமுனியம்மாளிடம் வாக்குவாதம் செய்தார். இதில் மனமுடைந்த அவர், வீட்டில் இருந்த மண்ணெண்ெணய் கேனை வீதிக்கு எடுத்து வந்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதியினர் சின்னமுனியம்மாள் உடலில் பற்றிய தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னமுனியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து சூரங்குடி(பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கலா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: