புவனகிரி, பிப். 14: பரங்கிப்பேட்டை அருகே உள்ளது பு.முட்லூர் கிராமம். இங்குள்ள காந்திநகர் என்ற இடத்தில் கன்னிக்கோயில் ஒன்று உள்ளது. இப்பகுதி மக்கள் கோயிலை உருவாக்கி வழிபட்டு வந்தனர்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார் அதில், சாலையை அடைத்தபடி கோயில் உள்ளதால் நிலத்திற்கு வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லை எனக் கூறியிருந்தார் இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வாசுதேவன், கோயிலை இடித்து அகற்ற உத்தரவிட்டார்.