பரங்கிப்பேட்டை அருகே கோர்ட் உத்தரவுப்படி கன்னிக்கோயில் இடித்து அகற்றம்

புவனகிரி, பிப். 14: பரங்கிப்பேட்டை அருகே உள்ளது பு.முட்லூர் கிராமம். இங்குள்ள காந்திநகர் என்ற இடத்தில் கன்னிக்கோயில் ஒன்று உள்ளது. இப்பகுதி மக்கள் கோயிலை உருவாக்கி வழிபட்டு வந்தனர்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார் அதில், சாலையை அடைத்தபடி கோயில் உள்ளதால் நிலத்திற்கு வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லை எனக் கூறியிருந்தார் இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வாசுதேவன், கோயிலை இடித்து அகற்ற உத்தரவிட்டார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோயிலை இடிக்க வந்தபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கூடுதல் அவகாசம் கேட்டனர். அதனால் அப்போது கோயில் இடிப்பது தவிர்க்கப்பட்டது.இந்நிலையில் நேற்று அதிரடியாக கோயில் இடிக்கப்பட்டது. சிதம்பரம் டிஎஸ்பி பாண்டியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயில் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டது.

Related Stories: