பூந்தமல்லியில் 20ம் தேதி நடக்கும் ஊராட்சி சபையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு : தெற்கு மாவட்ட திமுக ஆலோசனை

பூந்தமல்லி, பிப். 14:  பூந்தமல்லியில் 20ம் தேதி நடைபெற உள்ள ஊராட்சி சபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழக அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன் தலைமையில் பூவிருந்தவல்லியில் நடைபெற்றது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆ.கிருஷ்ணசாமி, பூவை சி.ஜெரால்டு,  ஆர்.டி.இ.ஆதிசேஷன், கே.ஜெ.ரமேஷ், காயத்ரிதரன், மா.இராஜி, ஜி.ஆர்.திருமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூந்தமல்லி நகர செயலாளர் பூவை எம்.ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் பூவை எம்.ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த கூட்டத்தில்  தெற்கு மாவட்ட செயலாளர்  ஆவடி  சா.மு. நாசர்  ஆலோசனைகளை வழங்கி  சிறப்புரையாற்றினர். வருகின்ற மார்ச் 1, தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஏழை எளியோருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என்றும்,  பிப்ரவரி 20ம் தேதி பூந்தமல்லி தொகுதியில் நடைபெற உள்ள ஊராட்சி சபை மற்றும் வாக்குச்சாவடி பணிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்தும்,  வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் டி.தேசிங்கு, எஸ். மகாலிங்கம், மோ.ரமேஷ், டி.ராமகிருஷ்ணன், சி.சு.ரவிச்சந்திரன், அயப்பாக்கம் துரை.வீரமணி, ஆர்.ஜெயசீலன், க.அரிகிருஷ்ணன், டி.கிறிஸ்டி, ஜி.ராஜேந்திரன், மீ.வே.கருணாகரன், ந.ஜெகதீசன், தி.வை.ரவி, தி.வே.முனுசாமி, அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் ப.சிட்டிபாபு,  ஏ.ஜெ.பவுல், வி.சி.ஆர்.குமரன், சரஸ்வதி சந்திரசேகர், திருமால், ஆர்.ராஜா, சி.சு.விஜயகுமார், ஏ.ஜி.ரவி, நாகூர்கனி, பிளேஸ்பாளையம் டில்லிபாபு, அசோக்குமார் உள்பட துணை அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

Related Stories: