சென்னை, பிப். 14: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த அப்துல்லா (37) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவரது உடமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று தீவிரமாக சோதித்தனர். அவரது உள்ளாடையில் ரப்பர் பாஞ்ச் ஒன்று சுருட்டி கட்டி வைத்திருந்தார். அதை அதிகாரிகள் எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் ₹7 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. எனவே அதிகாரிகள், தங்க கட்டியை பறிமுதல் செய்தனர்.