சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

சென்னை, பிப். 14: சென்னை-கூடூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை-கூடூர் இடையே தண்டவாள பராமரிப்பு இன்று துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி எம்எம்சியில் இருந்து காலை, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் ரயில், 14 (இன்று) முதல் 22ம் தேதி வரை, மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.அதேபோல் எம்எம்சியில் இருந்து மதியம், 12.20 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் ரயில், (14-22ம் தேதிகளில்) எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும் கும்மிடிப்பூண்டியில் இருந்து எம்எம்சிக்கு மதியம், 12.55மணிக்கு புறப்படும் ரயில், (14-22ம் தேதிகளில்) மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.அதேபோல் எம்எம்சியில் இருந்து மதியம், 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் ரயில், (14-22ம் தேதி வரை) மீஞ்சூரில் இருந்து, 15 நிமிடம் தாமதமாக புறப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: