தொழிலாளி மருத்துவ செலவுக்கு திமுக., சார்பில் ரூ.20 ஆயிரம் வழங்கல்

காங்கயம், பிப். 13:  காங்கயம் ஒன்றிய திமுக சார்பில், தொழிலாளிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ரூ.20 ஆயிரம் வழங்கினர்.

  திருப்பூர் மாவட்டம்  காங்கயம் துண்டுக்காடு ஜெ.நகரில் வசிப்பவர் பிரகாஷ் (40), பெயிண்டர். இவர் மனைவி ஜானகி (35), மகன் யஷ்விந்த் (7). பிரகாஷ்க்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்து விட்டது. மாற்று கிட்னி பெருத்தினால் தான் அவர் உயிர் வாழமுடியும் என்ற நிலையில், பிரகாஷ் அக்கா ராணி கிட்னி தர தயாரா உள்ளார். ஆனால் மாற்று கிட்னி பொருத்த மருத்துவ செலவு ரூ.8 லட்சம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காப்பீட்டு திட்டத்தில் வரக்கூடிய பணம் போக மீதம் ரூ.3லட்சம் தேவைப்பட்டது.

 இவர்கள் கூலி வேலை பார்த்துதான் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். பெரிய தொகையை தயார் பண்ண முடியாமல் தவித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனையரிந்த காங்கயம் வேர்கள் அமைப்பினர் பிரகாஷ்காசுக்கு உதவ முன்வந்து நிதி திரட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காங்கயம் திமுக., வடக்கு ஒன்றிய செயலாளர் சிதம்பரம், பிரகாசின் இல்லத்திற்கு சென்று ரூ.20 ஆயிரம் வழங்கினார். இதில் வேர்கள் அமைப்பின் சங்கரகோபால், சிவன்மலை வேலுசாமி உடனிருந்தனர்.

Related Stories: