திருப்பூர், பிப். 13: திருப்பூரில் நாளை (14ம் தேதி) நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. திருப்பூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை (14ம் தேதி) காலை 10.30 மணி முதல் மாலை 4 வரை நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடக்கிறது. அது சமயம் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். பயிற்சிக்கு வருபவர்கள் தங்களது ஆதார் எண்ணுடன் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0421- 2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி பணியாளர்களுக்கு பயிற்சி