திமுக., ஊராட்சி சபை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பங்கேற்பு

அவிநாசி, பிப். 13:  அவிநாசி வடக்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் திமுக., முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நேற்று ஊராட்சி சபை கூட்டம் நடத்தினார்.

 அவிநாசி வடக்கு ஒன்றிய பகுதிகளில் திமுக., கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நேற்று தண்டுக்காரன்பாளையம், போத்தம்பாளையம், மங்கரசவலையபாளையம், வடுகபாளையம், தத்தனூர், தாமரைக்குளம், புலிப்பார், பாப்பாங்குளம், குட்டகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தினார். இதில் முதியோர் ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா, தெருவிளக்கு, ரோடு வசதி, சாக்கடைக்கால்வாய் வசதி, அரசு பள்ளிகளில் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

  மேலும் பல்வேறு ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி

னர்.

இந்த மனுக்களை பெற்று கொண்ட ஆ.ராசா மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து, உரிய நடவடிக்கை எடுக்க சொல்வதாக உறுதியளித்தார். கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட திமுக., செயலாளர் செல்வராஜ் உள்ளிட திமுக., பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: