அவிநாசி, பிப். 13: அவிநாசி அருகே தெக்கலூரை சேர்ந்தவர் ராஜூ மகன் சந்திரசேகரன் (56), இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று பைக்கில் தெக்கலூரிலிருந்து வெள்ளாண்டி பாளையம் செல்வதற்காக வஞ்சிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.