வெள்ளகோவில், பிப். 13: வெள்ளகோவில் நகரத்தில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பழைய பஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமாக இடம் உள்ளது. இதில் முன்பு பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஆனால் நகராட்சியாக தரம் உயர்த்திய பின், மாற்று இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு அங்கு செயல்பட துவங்கியது.
இதையடுத்து கடந்த 10 ஆண்டாக அந்த கட்டிடத்தில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டம் கட்டப்பட்டு தீயணைப்பு நிலையம் அங்கு செயல்பட துவங்கியது. தற்போது பழைய போரூராட்சி அலுவலக கட்டடம் பயன்படுத்த படாமல் இருக்கிறது.