காங்கயம், பிப். 13: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலில் கடந்த 1மாதத்தில் ரூ.23 லட்சம் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதிக்கு பிறகு நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சபர்மதி, சிவன்மலை உதவி ஆணையர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.23 லட்சத்து 31 ஆயிரத்து 126, தங்கம் 86 கிராம், வெள்ளி 93 கிராம் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.