ஈரோடு, பிப்.13: கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் கார்த்திக் (18). இவர், கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் ஹரிகிருஷ்ணன் (18). இவரும், அதே கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் இருந்து பைக்கில் ஏற்காடு சென்று கொண்டிருந்தனர். ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள சமத்துவபுரம்மேடு பகுதியில் வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக பைக்கை நிறுத்தியபோது அங்கு வந்த 2 மர்மநபர்கள், திடீரென கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்து சென்று விட்டனர்.