மில் விடுதியில் தொழிலாளி தற்கொலை

ஈரோடு, பிப்.13: மில் விடுதியில் வடமாநில தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அசாம் மாநிலம், குக்கரஜிலி மாவட்டத்தை சேர்ந்தவர் பிஜீதாஸ் (40). இவர், கடந்த ஓராண்டாக கோபி அடுத்துள்ள நம்பியூரில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில் குடியிருப்பில் தங்கி அங்கு பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பிஜீதாஸ், நீண்டநேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் தூங்க சென்ற பிஜீதாஸ், திடீரென கயிற்றால் தூக்கு போட்டு தொங்கினார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: