திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம், பிப்.13: திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதானதால் இரு மாநிலங்களுக்க இடையே 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

இந்த மலைப்பாதை வழியாக தமிழகம்-கர்நாடகம் இடையே பஸ் மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை கர்நாடக மாநிலம் கே.ஆர்.நகரிலிருந்து நெல் மூட்டை ஏற்றிய கொண்டு லாரி ஒன்று ஈரோடு செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது.

லாரியை டிரைவர் செல்வராஜ் ஓட்டினார். 9வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது.

இதனால், மலைப்பாதையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றன.

இதுகுறித்து தகவலறிந்த ஆசனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 1 மணியளவில் லாரி பழுது நீக்கப்பட்டு நகர்த்தி நிறுத்தப்பட்டது. மற்ற வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதனால், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே  5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: