பவானி, பிப். 13: ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் சங்கம் (கட்சி சார்பற்றது) கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பவானியில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் சுப்பிரமணி, துணைத் தலைவர் ராஜா, செயலாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தனர்.