பைக் மீது கார் மோதி வாட்ச்மேன் பலி

சத்தியமங்கலம், பிப்.13: பவானிசாகர் அருகே தொட்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (50). இவர், சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் வெள்ளிங்கிரி இரவுப்பணிக்காக மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம் சாலையில் சத்தியமங்கலம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

பெரியகள்ளிப்பட்டி அருகே சென்றபோது சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற கார், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் வெள்ளிங்கிரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Related Stories: