வன்கொடுமை பாதிப்பு மகளிருக்கு மருத்துவ, சட்டப்பூர்வ நடவடிக்கை உதவி மையத்தில் பணியிடங்கள் விண்ணப்பம் வரவேற்பு

கரூர்,பிப்.13: வன்கொடுமை  பாதிப்பு மகளிருக்கு மருததுவ, சட்டப்பூர்வ நட வடிக்கைக்கு உதவிசெய்யும்  பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்  மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் மகளிருக்கு மருத்துவ வசதி  அளித்தல், சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உதவிசெய்தல், மனரீதியான ஆலோசனைகள்  வழங்குவதற்காக மத்தியஅரசினால் சக்தி எனும் திட்டத்தினகீழ் ஒன் ஸ்டாப்  சென்டர் அனுமதிக்கப்பட்டு மையம் செயல்பட நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த மையத்தை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட  உள்ளனர். பணியிடங் களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க  விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது சுயவிபரங்களை தட்டச்சு செய்து மார்ச்  1ம்தேதி க்குள் மாவட்ட சமூகநல அலுவலர், கலெக்டர் அலுவலக வளாகம், கரூர்  முகவரி க்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

குறிப்பிட்ட  காலக்கெடுவிற்கு பின் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள்  ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு  கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அணுகி  பெற்றுக்கொள்ளலாம்.

பணியிடங்கள்: நிர்வகிப்பவர் பதவி (ஓஎஸ்சி  சென்டர் அட்மினிஸ்ட்ரேட்டர்) தகுதி. சட்டப் படிப்பு முதுநிலை சமூகப்பணி,  பெண்வன்கொடுமை தொடர்பாக 5ஆண்டு பணி புரிந்த முன்அனுபவம். மாஸ்டர் சோசியல்  ஒர்க். 5வருட அனுபவம்.

வழக்குப்பணியாளர் (கேஸ் ஒர்க்கர்), சட்டப்படிப்பு, முதுநிலை சமூகப்பணி பெண். வன்கொடுமை தொடர்பாக 3ஆண்டு பணிபுரிந்து முன்அனுபவம்.

தகவல்  தொழில்நுட்ப பணியாளர் (ஐடி ஸ்டாப்) தகுதி. இளநிலை பட்டயப் படிப்புடன்  கணினி முன் அனுபவம் 3ஆண்டுகள். பல்நோக்கு உதவியாளர் (மல்டி பர்பஸ்ஹெல்பர்)  தகுதி.3ஆண்டு முன் அனுபவம் உள்ள நபர்.  இவ்வாறு கலெக்டர் அலுவலக  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: