காந்திகிராமம் பகுதி பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கப்படுமா?

கரூர்,பிப்.13: கரூர் காந்திகிராமம் பகுதி பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரண ங்களை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி பூங்கா அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில், அமைக்கப் பட்டுள்ள சிறுவர், சிறுமிகள் விளையாடும் அனைத்து உபகரணங்களும் பழுதடை ந்து மோசமான நிலையில் உள்ளன. கரூர் நகராட்சியை பொறுத்தவரை பொழுது போக்கு அம்சங்கள் மிகவும் குறைவு என்பதால் இதுபோன்ற பூங்காக்களை குழந்தைகளும், பொதுமக்களும் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாகவே இஙகுள்ள உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்து எளிதாக பயன்படுத்திட முடியாத நிலை நிலவி வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தேவையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர் பார்க்கின்றனர்.

Related Stories: