கரூர், பிப்.13: சென்டர் மீடியனில் ரிப்ளக்டர் இல்லாததால் இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்படுகிறது.
கரூரில் இருந்து செல்லும் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் செல்வதற்கும், வருவதற்கும் உதவியாக இவை அமைக்கப்பட்டன. எனினும் இவற்றில் கருப்பு. வெள்ளைபெயிண்ட் பூசியதோடு நெடுஞ்சாலைத் துறையினர் விட்டுவிட்டனர். பகல் வேளைகளில் மட்டுமே சென்டர் மீடியன் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியும். இரவு நேரத்தில் ஒளிஉமிழும் வர்ணம் அல்லது ரிப்ளக்டர்களை பொருத்தினால தான் தூரத்திலேயே வாகன ஓட்டிகளுக்கு ரிப்ளக்டர் இருப்பது தெரியும். ஆனால் ரிப்ளக்டர்கள், ஜிப்ராகோடுகள் போடப்படவில்லை.