ரயில் நிலையத்தில் அடிக்கடி பழுதாகும் அறிவிப்பு போர்டு பயணிகள் அவதி

கரூர்,பிப்.13: கரூர் ரயில்நிலையத்தில் டிஜிடல் போர்டு பழுதை சரிசெய்யவேண்டும்  என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்கள் வரும்நேரம் தாமதமாக வரும் அறிவிப்பு, ரயில்வந்து நிற்கும் நடைமேடை போன்றவற்றை தெரிந்து கொள்வதற்காக ரயில்நிலைய நுழைவுவாயில் முன்பு டிஜிடல் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த போர்டு அடிக்கடி மக்கர் ஆகிவிடுகிறது.

இதனால் ரயில்கள் பற்றிய அறிவிப்பினை அறிந்துகொள்ள முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர். ரயில்நிலையத்திற்குள் போய் விசாரித்துவிட்டு வருகின்றனர். வெளியிலேயே தெரிந்துகொள்ளும் வசதிக்காக அமைக்கப்பட்ட இந்த டிஜிடல் போர்டை செயல்பாட்டில் வைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: