பேட்ஜ் ஒர்க் செய்த சாலை மீண்டும் சேதம் வாகன ஓட்டிகள் அவதி

நாகை, பிப். 13: நாகை வெளிப்பாளையம் சட்ட மன்ற தொகுதி அலுவலகம் அருகே நாகூரில் இருந்து மணிக்கூண்டு வழியாக புதிய பேருந்து நிலையம் வரும் சாலை குண்டும் குழியுமாக இருந்தது.  கடந்த 6 மாதத்திற்கு முன் நாகைக்கு தமிழக கவர்னர் ஆய்வுக்கு வந்த போது சாலையை தற்காலிகமாக பேச் ஒர்க் மூலம் சாலை சீரமைக்கப்பட்டது.

 அந்த சாலையை மீண்டும் சீரமைக்கப்படாததால் சாலை பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்ட இடங்கள் மீண்டும் சேதம் ஏற்பட்டு தற்போது சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து சாலையில் ஜல்லிகள் பரவி கிடக்கிறது. சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகள் மற்றும் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி படுகின்றனர். உடேன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: