நாகை, பிப்.13: நாகை மாவட்டம் நாகை ஒன்றியம் பாலையூர் ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கேஸ் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி கழக செயலாளர் கார்மேகம் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை கழக பிரதிநிதியும், மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளருமான கிரகாம்பல் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுவை பெற்று சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில்,