பூம்புகாரிலிருந்து பழையாறுக்கு புதிய பேருந்து இயக்க வேண்டும் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் கோரிக்கை

சீர்காழி. பிப்.13:  பூம்புகாரிலிருந்து பழையாறுக்கு புதிய பேருந்து இயக்க வேண்டும் என திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் கோரிக்கை

விடுக்கப்பட்டது.

சீர்காழி அருகே மணிக்கிராமத்தில் தி.மு.க ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ வக்கீல் பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் அப்துல்ரஹீம் வரவேற்றார். நாகை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் நிவேதாமுருகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம்

மனுக்களை பெற்றார்.கூட்டத்தில் மணிக்கிராமம் ஊராட்சியில் அமைந்துள்ள 8 குளங்கள் ஆக்கிரமைப்பு செய்யப்பட்டு தூர்ந்து போய் உள்ளது. எனவே ஆக்கிரமைப்புகளை அகற்றி குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும். மணிக்கிராமம் ஊராட்சியி;ல் பழதடைந்து காணப்படும் ஊராட்சி அலுவலகம் மற்றும் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். மணிக்கிராமத்தில் மயான சாலையை சீரமைக்க வேண்டும். பூம்புகாரிலிருந்து பழையாறு பகுதிக்கு திருநகரி வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் சரமாரி

புகார் தெரிவித்தனர்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் செல்லசேதுரவிக்குமார், பிரபாகரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் விஜயேஸ்வரன், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் காழிகலைவாணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜீபையர் அஹமது மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: