அரியலூர் பகுதியில் மின்விநியோகத்தில் மாற்றம்

அரியலூர்,பிப்.13: அரியலூர் கோட்டம் மற்றும் உபகோட்டத்திற்குட்பட்ட தேளுர்   துணைமின்  நிலையத்தில் உள்ள திறன் மின்மாற்றி எண்.1-ல் சிறப்பு பராமரிப்பு பணிகள் இன்று முதல் மூன்று தினங்களுக்கு நடைபெற இருப்பதால் இந்த துணைமின் நிலையத்தின்   பெரிய திருக்கோணம் மின்பாதையில் இருந்து மின்னோட்டம் பெறும் வாழைக்குழி, சுண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, சிலுப்பனூர், ஓரியூர், ஓட்டக்கோவில் பகுதிகள், கீழப்பழூர்   துணை மின்நிலைய   கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்ட மின்பாதைக்கும்,   விளாங்குடி  மின்பாதையில் உள்ள நாச்சியார்பேட்டை, மணகெதி, ஆதிச்சனூர் ஆகிய பகுதிகள் உடையார்பாளையம்   துணைமின் நிலையம்  த.மேலூர் மின்பாதைக்கு மற்றும் தேளுர் மின்பாதையில் உள்ள தேளுர் மற்றும் குடிசல் பகுதிகளுக்கு அரியலூர்   துணை மின்நிலையம்  அஸ்தினாபுரம் மின்பாதைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.

அதுசமயம் இருமுனை மற்றும் மும்முனை மின்சாரம் வழங்குவதில் மாற்றம் ஏற்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும், காத்தலும்)  சுப்பிரமணியன்   தெரிவித்துள்ளார்.

Related Stories: