பெரம்பலூரில் இன்று மின்தடை

பெரம்பலூர், பிப்.13: பெரம்பலூரில் இன்று (13ம்தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

 இதுகுறித்து பெரம்பலூர் உதவி  மின் செயற்பொறியாளர் மாணிக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று (13ம்தேதி) மாதாந்திர  பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், துணை மின் நிலையத்திலிருந்து  மின் விநியோகம் பெறப்படும் பகுதிகளான பெரம்பலூர் நகர் பகுதிகளிலுள்ள  புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம்,  துறைமங்கலம், மின்நகர், நான்கு ரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை,  ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை,  அண்ணாநகர், கேகே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், பாலம்பாடி மற்றும்  கிராமப்பகுதிகளான சிறுகுடல், அருமடல், செங்குணம், கீழப்புலியூர்,  கே.புதூர், எஸ்.குடிகாடு, இந்திராநகர், காவலர் குடியிருப்பு, எளம்பலூர்  மற்றும் சமத்துவபுரம் ஆகியப்பகுதிகளுக்கு காலை 9.45 மணி முதல் பராமரிப்புப்  பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: