சூலூர் அருகே கொடி கம்பம் வெட்டி சாய்ப்பு

சூலூர்.பிப்.13:  சூலூர் திருச்சி மெயின்ரோட்டில் காங்கியம்பாளையம் பகுதியில் தி.மு.க.வின் 20 அடி உயர கொடி கம்பம் உள்ளது. இந்த கொடி கம்பத்தில் கடந்த வாரம் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தின் போது கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவில் யாரோ மர்ம நபர்கள் கொடிகம்பத்தை வெட்டி கீழே கொடியுடன் சாய்த்துள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி தி.மு.க.வினர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சூலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க.பொறுப்பாளர் சன் ராஜேந்திரன், காங்கியம்பாளையம் ஊராட்சி அவைத்தலைவர் ஆறுமுகம், ஒன்றிய  இளைஞரணி தலைவர் பிரபு ஆகியோர் வெட்டி சாய்க்கப்பட்ட கொடி கம்பத்தை பார்வையிட்டு சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க. கொடிகம்பம் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: