யுனிவர்சல் பள்ளியில் துப்பாக்கி சுடும் போட்டி

இடைப்பாடி, பிப்.13: சேலம் ஏர்கன் அசோசியேசன் சார்பில், மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி, இடைப்பாடி யுனிவர்சல் பள்ளியில் நடந்தது. பள்ளியின் தாளாளர் சீனிவாசன், சக்தி சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏர்கன் அசோசியேசன் சேலம் மாவட்ட தலைவர் சின்னசாமி, தமிழ்நாடு இணை செயலாளர் ராஜ்குமார், பாரதிய வித்யாலயா பள்ளி தாளாளர் செந்தில் ஆனந்த், நாமக்கல் மாவட்ட பளு தூக்கும் சங்க செயலாளர் மெய்ஞானம், மாவட்ட பொருளாளர் விஜயலஷ்மி, கராத்தே சங்க மாநில செலயாளர் சின்னசாமி, மஞ்சுநாதன், கந்தவேல், ராஜபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் ஆதர்ஷ், அபிஷேக் நரேந்திரநாத், ஜெய்விக்னேஷ், கௌசிகன், ஹரீஸ்ராகவ், மது, திவ்யபிரகாஷ், ஆகியோர் முதலிடம் பெற்று தங்கம் வென்றனர். இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை யுனிவர்சல் சீனிவாசன், பாரதிய வித்யாலயா செந்தில் ஆனந்த் ஆகியோர் வழங்கினர்.

Related Stories: