ேமட்டூர், பிப்.13: மேட்டூர் பெண்ணை கொடூரமாக கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிய சம்பவத்தில் கைதான 3 பேர், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.சேலம் மாவட்டம் ேமட்டூரை அடுத்த கொளத்தூர் காளையனூரை சேர்ந்த குருநாதன் மகள் பழனியம்மாள்(38). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டூர் காவிரி நீர்த்தேக்க பகுதியில் வயிறு பகுதி கத்தியால் அறுக்கப்பட்டு, கற்களை கட்டியபடி நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கொளத்தூர் ேபாலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பழனியம்மாளுக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்துள்ளார். அவர்களும் இறந்த நிலையில், சகோதரியின் அரவணைப்பில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பழனியம்மாளின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த மாரியப்பனின் வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்துள்ளது. இதற்கு பழனியம்மாள் தான், காரணம் என்று கூறி, மாரியப்பன் அவரை தாக்கியுள்ளார்.பதிலுக்கு பழனியம்மாளும் அவரை கல்லால் தாக்கியதால், ஆத்திரத்தில் கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவரை மாரியப்பன் கொலை செய்தது தெரியவந்தது.