இடைப்பாடி அருகே குடிசை வீடுகள் எரிந்து நாசம் பொருட்கள் சாம்பல்

இடைப்பாடி, பிப்.13: இடைப்பாடி அடுத்த மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன்(44). தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வரும் இவர், குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மேற்பகுதியில் மரம் உள்ளது. அதன் மீது மின்கம்பி செல்கிறது. இந்நிலையில் நேற்று மதியம் மின்கம்பிகள் உரசியதில் தீப்பொறி விழுந்து குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததும். சிறிது நேரத்தில் அருகில் உள்ள வீட்டிற்கும் பரவியது. அக்கம்-பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ அணையாததால் இடைப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், நிலைய அலுவலர்கள் முனியப்பன், ஆறுமுகம் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சுமார் ஒரு மணி நேரம் பேராடி தீயை அணைத்தனர். இதனால், மற்ற வீடுகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து இடைப்பாடி போலீசார் மற்றும் ஆர்ஐ பிரபு ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: