பொன்னமராவதி,பிப்.13: வருடத்திற்கு ரூ.6ஆயிரம் மத்திய அரசு அறிவித்திருப்ப தால் பொன்னமராவதி பகுதியில் கணினி சிட்டா எடுக்க மக்கள் அலை மோதுகின்றனர்.
பொன்னமராவதி சிறு, குறு விவசாயிகளுக்கான பிரதமமந்திரி கிசான் திட்டத் தின் கீழ், ஆதரவுத்தொகை பெறுவதற்கான விண்ணப்பபடிவம் கொடுப்பதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து விவசா யிகளுக்கும் வருடத்திற்கு ரூ.6ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவி த்தது. இவை வருடத்திற்கு மூன்று தவணையாக தகுதியுள்ள விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என அறிவித்தது. இந்த தொகை பெறுதற்கு விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தின் கணினி சிட்டா, ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ் புத்தகம், போன்ற ஆவணங்கள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.