புதன்சந்தையில் மாடுகள் விலை சரிவு

சேந்தமங்கலம், பிப்.13:   நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமை மாட்டுச் சந்தை கூடுவது வழக்கம். மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் புதன்சந்தையில் திரள்வர். மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவை, பொள்ளாச்சி மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளும் மாடுகளை வாங்குவதற்காக இச்சந்தைக்கு வருவதுண்டு. நேற்று கூடிய மாட்டுச்சந்தையில் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக அளவிலான மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தது.  கடந்த வாரம் ₹13 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட இறைச்சி மாடு இந்த வாரம் ₹12 ஆயிரத்திற்கும், ₹33 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கறவை மாடு ₹32 ஆயிரத்திற்கும், ₹9 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கன்றுகுட்டிகள் ₹8 ஆயிரத்திற்கு விற்பனையானது. 

Related Stories: