கிருஷ்ணகிரியில் மரத்தில் டூவீலர் மோதி விபத்து மருமகன் பலி; மாமியார் படுகாயம்

கிருஷ்ணகிரி, பிப்.13:  சொக்கடி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னூசாமி மகன் வீரமணி (43). இவர், கடந்த 10ம் தேதி மாலை 3.20 மணிக்கு, மாமியார் அமிர்தம் (60) என்பவரை தனது டூவீலரில் ஏற்றிக்கொண்டு, கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் ரோட்டில் பாலகுறி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக சென்ற டூவீலரை கட்டுபடுத்த முடியாமல், நிலை தடுமாறி சாலையோர புளியமரம் மீது டூவீவலர் மோதியது. இதில் வீரமணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், உயிரிழந்த வீரமணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்த அமிர்தத்தை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: