தர்மபுரி, பிப்.13: தர்மபுரி அருகே, நூலஅள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு பெங்களூருவில் உள்ள என்டிடிஎப் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தூய்மை பணிக்காக வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் உடைந்து போன நாற்காலிகளை சீரமைத்தனர். மேலும், அனைத்து வகுப்பறைகளுக்கும் சுண்ணாம்பு அடிக்கப்பட்டது. தூய்மை பணிக்கான ஏற்பாடுகளை, பழனி கவுண்டர் மாதம்மாள் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி நன்றி கூறினார்.