வலங்கைமான்,பிப்.13: வலங்கைமான் அடுத்த ஊத்துக்காடு ஊராட்சியில் அதிமு.க உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி நூறுபேர் திருவாரூர் மாவட்ட செயலாளர் கலைவாணன் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஊத்துக்காடு ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக வார்டு செயலாளர்கள் செல்வம், கணேசன் ஆகியோர் தலைமையில் பெண்கள் உட்பட 100 பேர் திருவாரூர் தி.மு.க மாவட்ட செயலாளர் கலைவாணன், மேற்கு ஒன்றிய செயலாளர் அண்பரசன் ஆகியோர் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சிஅதே போல் கோவிந்தகுடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக மற்றும் தேமுதிகவை சேர்ந்த பிரபாகரன், சுரேந்தர் உள்ளிட்ட முப்பதுபேர் அக்கட்சியிலிருந்து விலகி திமுக வில் இணைந்தனர்.