திருச்சி, பிப்.13: உலகத்திறனாய்வுத் திட்டத்தின் கீழ் 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் கல்வி மாவட்ட அளவில் நடைபெற உள்ளது.
தமிழக அரசு சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை இளம் வயதிலேயே கண்டறியும் பொருட்டு உலக திறனாய்வு கண்டறியும் திட்டம் என்ற திட்டத்தில் பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடற்திறன் போட்டிகள் நடத்துகிறது. உடற்திறனை வெளிபடுத்துவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி மாவட்ட மற்றும் மண்டல அளவில் உடற்திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு மாநில அளவில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படும். முகாமில் உணவு, சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.