பாலக்கோடு நகர அதிமுக செயலாளர் திருமண வரவேற்பு விழா

காரிமங்கலம், பிப்.13: பாலக்கோடு நகர அதிமுக செயலாளரும், நகர வீட்டு வசதி சங்க தலைவருமான சங்கர், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் மகள் கற்பகம் ஆகியோரின் திருமணம் நேற்று முன்தினம் திருத்தணியில் நடந்தது. தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், உயர்க்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன், மல்லிகாஅன்பழகன் ஆகியோர் தலைமை வகித்து திருமண விழாவை நடத்தி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதைதொடர்ந்து திருமண வரவேற்பு விழா இன்று(13ம் தேதி) போச்சம்பள்ளி ஸ்ரீ அம்மன் மஹால் திருமண மண்படத்தில், காலை 11மணி முதல் மாலை 3மணி வரை நடக்கிறது. திருமண வரவேற்பு விழாவில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஆவின் தலைவர் டி.ஆர்.அன்பழகன், தொழிலதிபர் சையத்இக்ரம்உல்லா, முன்னாள் எம்பிக்கள் தீர்த்தராமன், நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: