அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.13: பாப்பிரெட்டிப்பட்டி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி உதவி கோட்ட பொறியாளர் பத்மாவதி தலைமை வகித்து, பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் வெங்கட்ராமன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அஜீஸ், நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர்கள் ராஜாஜி, மாரியப்பன் மற்றும் சாலை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: