அண்ணாமலைஅள்ளியில் பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டி

காரிமங்கலம், பிப்.13:  காரிமங்கலம் ஒன்றியம் அண்ணாமலைஅள்ளியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதுமான குடிநீர் கிடைக்காததால், மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால், கடந்த 2014-15ம் ஆண்டு, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வழங்குவதற்காக, ₹2 லட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால், இந்த தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே, மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர, அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Related Stories: