ரவுடிகளின் வீடுகளில் ஒதியஞ்சாலை போலீசார் திடீர் சோதனை

புதுச்சேரி, பிப். 13:  பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் ஒதியஞ்சாலை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க புதுச்சேரி போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஒதியஞ்சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கண்டாக்டர் பகுதியில் உள்ள அடிக்கடி குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ரவுடிகள் ஆகியோரின் வீடுகளில் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று இரவு சோதனை நடத்தினர். அப்போது ரவுடிகள் உள்ளிட்ட குற்றவாளிகள் தற்போது செய்யும் தொழில், வேலை குறித்து கேட்டறிந்தனர். மேலும் அவர்கள் ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்

படும், இனி திருந்தி வாழ வேண்டும், குழந்தைகளை படிக்க வைத்து நல்வழி காண்பிக்க வேண்டும், அதற்கு காவல் துறை உறுதுணையாக இருக்கும் என அறிவுரை வழங்கினர்.

Related Stories: