ஸ்கூட்டரில் மது கடத்திய முதியவர் அதிரடி கைது

காலாப்பட்டு, பிப். 13: புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே பெரியமுதலியார்சாவடி இசிஆர் சாலையில் மதுவிலக்கு சோதனைச்சாவடி உள்ளது. இந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்யும் போலீசார், புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படும் மதுபாட்டில்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஸ்கூட்டரில் வந்த நபரை மடக்கி சோதனை செய்தபோது, சீட்டின் கீழ்பகுதியில் 60 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை செய்தபோது, புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் (62) என்பது தெரியவந்தது. மேலும் அவர் புதுச்சேரி மொத்தவிலை கடையில் மதுபாட்டில் வாங்கி சென்று தமிழக பகுதியில் விற்க முயன்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மதுபாட்டில் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, மரக்காணம் கலால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிந்த போலீசார் பாண்டுரங்கனை கைது செய்து விசாரணை நடத்தி

வருகின்றனர்.

Related Stories: