மது அருந்தியபோது சாவு ஆட்டோ டிரைவர் உடல் பிரேத பரிசோதனை

புதுச்சேரி,  பிப். 13: புதுவை, ரெட்டியார்பாளையம், ஆருத்ரா நகரைச் சேர்ந்தவர்  பழனிசாமி (45). ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று வீட்டில் மதுஅருந்தியபோது  உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மனைவி தமிழரசி  மற்றும் உறவினர்கள் காப்பாற்றி சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு  கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.அவரது  உடலில் காயங்கள் இருந்த நிலையில் சாவில் சந்தேகம் இருப்பதாக தகவல்  பரவியது. இதையடுத்து பழனிசாமி உடலை கைப்பற்றிய போலீசார் 174 பிரிவில்  வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில்  வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அவர் இறந்திருப்பதும், உயிருக்கு  போராடியபோது உறவினர்கள் உதவியதில் நகக் கீறல்கள் ஏற்பட்டிருப்பதும்  தெரியவந்தது. இதையடுத்து அவரது மனைவியிடம் பழனிசாமியின் உடல்  ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: