தீக்குளித்து வாலிபர் தற்கொலை

ரிஷிவந்தியம், பிப். 13:  ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் அண்ணாநகரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் விவேக் (23). இவர் கடந்த 5 மாதத்துக்கு முன் மூங்கில்துறைப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவசகாயம் மகள் காவியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக விவேக் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்ததால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விவேக் நேற்று இறந்தார்.இதுகுறித்து மாணிக்கம் பகண்டை கூட்ரோடு காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: