உளுந்தூர்பேட்டை, பிப். 13: உளுந்தூர்பேட்டை பேரூராட்சி கிழக்கு கந்தசாமிபுரம் பகுதியில் உள்ள பழமையான சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 16ம் தேதி காலையில் அனுக்ஞை மற்றும் விநாயகர் பூஜையுடன் துவங்கி கணபதி ஹோமம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாஸ்துசாந்தி முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது. ராமகிருஷ்ணா ஆசிரமத்தின் தலைவர் மத் அனந்தானந்தஜிமகராஜ், உளுந்தூர்பேட்டை தொகுதி குமரகுரு எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை விழாகுழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.