திருவில்லிபுத்தூரில் புதிய தாசில்தாராக பாண்டி சங்கர்ராஜ் பொறுப்பேற்றார். மனித நேய பயிற்சி விழா

சாத்தூர், பிப்.13: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், சிவகங்கை இணை ஆணையர் அறிவுறுத்தல்படி திருக்கோவில் வளாகத்தில் பரம்பரை அறங்காவலர் ராமமூர்த்தி பூசாரி தலைமையில் நேற்று மனித நேய பயிற்சி விழா நடைபெற்றது.  சாத்தூர் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி தமிழ்ஆசிரியை வசந்தராணி மனித நேய பற்றிய பயிற்சி அளித்தார். இதில், கோயில் பணியாளர்கள், சுற்றுவட்டார கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இருக்கன்குடி கோயில் உதவி ஆணையர், செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) செய்திருந்தனர்.

Related Stories: