திருச்சுழி, பிப். 13: நரிக்குடி அருகே, டூவீலர் விபத்தில் வாலிபர் பலியானார்.
நரிக்குடி அருகே, திம்மாபுரத்தை சேர்ந்தவர் வீரணன் (23). ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரும், அதே ஊரை சேர்ந்த லிங்குசாமியும் ஆவராங்குளத்தில் நேற்று முன்தினம் நடந்த உறவினர் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு, டூவீலரில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.தொட்டியாங்குளம் அருகே, திடீரென ஆடு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி இருவரும் டூவீலருடன் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் பின்னால் அமர்ந்திருந்த வீரணனன் படுகாயம் அடைந்தார். லிங்குசாமி லேசான காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் வீரணன் இறந்தார். இது குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.