திருவில்லிபுத்தூர் கண்மாயில் எலும்புக்கூடு மீட்பு போலீஸசார் விசாரணை

திருவில்லிபுத்தூர், பிப். 13: திருவில்லிபுத்தூரில் பெரியகுளம் கண்மாயில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவில்லிபுத்தூரில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் பின்புற பகுதியில், எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக திருவில்லிபுத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் எலும்புக்கூடை மீட்டு, இறந்தது ஆணா? பெண்ணா என விசாரித்து வருகின்றனர். இது குறித்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்  பவுல் ஏசுதாஸ் கூறுகையில், ‘கண்மாயில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பாக விசாரித்து வருகிறோம்.  திருவில்லிபுத்தூர் மற்றும் காவல்நிலைய உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், காணாமல் போனவர்களின் தகவல்களை விசாரித்து வருகிறோம். எலும்புக்கூடை பார்க்கும்போது, 2 மாதங்களுக்கும் முன் இறந்தவருடையதாக இருக்கும்’ என்றார். பொன்னாங்கண்ணி கண்மாய் கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் கொடுத்த புகாரின் பேரில், நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: